திருச்சி, கிளியூர் அருகே கல்லணை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்!-திருவெறும்பூர் போலிசார் விசாரணை.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கிளியூர் அருகே உள்ள கல்லணை கால்வாயில், அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று, அழுகிய நிலையில் கரை ஒதுங்கி இருப்பதாக நேற்று திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு வந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார், கரை ஒதுங்கிய சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுக்குறித்து கிளியூர் கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதர் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply