செங்கம் கிளை சிறையில் திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கிளை சிறையில், மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கம் தாலுக்கா அலுவலகம் பின்புறம் உள்ள கிளை சிறையில் மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி ஆய்வு மேற்கொண்டு சிறையில் இருந்த கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். உணவு சரியாக வழங்கப்படுகிறதா? உணவுகள் நன்றாக உள்ளதா? கழிவறை கொசு தொல்லை உடல் நலம் குறைபாடு இருந்தால் மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தல், வழக்கு சம்மந்தமாக வழக்கறிஞர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? (அல்லது) நீதிமன்றம் மூலம் வழக்கறிஞர் ஏற்பாடு செய்யவேண்டுமா? போன்ற பலவற்றை கைதிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து போளுர் சாலை ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம் எதிரில் கட்டப்பட்டு வரும் நீதிமன்ற கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது குற்றவியல் நீதித்துறை நடுவர் சங்கர், சார்பு நீதிபதி ராஜ்மோகன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ராதிகா, நீதித்துறை நடுவர் முனுசாமி உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

-செங்கம் சரவணக்குமார்.

Leave a Reply