மு.க.அழகிரி தலைமையில் நடைப்பெற்ற அமைதி பேரணிக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு!

மறைந்த கலைஞர் மு.கருணாநிதியின் 30-ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில், சென்னை, திருவல்லிக்கேணி காவல் நிலையம் முதல், மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அமைந்துள்ள மு.கருணாநிதி நினைவிடம் வரை அமைதி பேரணி இன்று நடைப்பெற்றது.

இதில் மு.க.அழகிரியின் மகனும், கிளவுட் நயன் மூவீஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான தயாநிதி, மு.க.அழகிரியின் மகள் கயல்விழி ஆகியோர் பங்கேற்றனர்.

இப்பேரணியில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மு.க.அழகிரி தலைமையில் இன்று நடைப்பெற்ற இப்பேரணிக்கு, தமிழக அரசின் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு இருந்தது. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

படங்கள்: எஸ்.திவ்யா, ஏ.வனிதா.

One Response

  1. குமார் September 5, 2018 7:39 pm

Leave a Reply