வனப்பகுதியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

சேலம் மாவட்டம், கண்ணங்குறிச்சியை ஒட்டியுள்ள வனப்பகுதிக்குட்பட்ட இருட்டுக்கல் முனியப்பன் கோவிலுக்கு அருகில் உள்ள, காப்புகாட்டில், மரம் ஒன்றியில் தூக்கில் தொங்கியபடி வாலிபர் பிணம் இருந்துள்ளது. அப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள், இதை பார்த்து ஏற்காடு காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்த அத்தியப்பன் மற்றும் அவரது மனைவி சாந்தா ஆகியோர், இறந்தது தங்கள் மகன் காளிசிவா, (வயது 30) என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாகவே தனக்கு திருமணம் செய்து வைக்க கேட்டு வந்ததாகவும், தாங்களும் சில வரன்களை பார்த்தும் பொருந்தாததால் திருமணம் செய்ய முடியவில்லை எனவும். இதனால் கடந்த 28-ந்தேதி காளிசிவா வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் அவரது பெற்றோர் காவல் துறையினரிடம் கூறினர்.

இதனைத்தொடர்ந்து ஏற்காடு காவல் துறையினர் காளிசிவா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

-நே.நவீன் குமார்,

 

Leave a Reply