ரியல் எஸ்டேட் புரோக்கர் சந்தானம் வெட்டியதில் அப்பாவு என்பவர் பலி!

அப்பாவு (பழைய படம்)

ரியல் எஸ்டேட் புரோக்கர் சந்தானம் மற்றும் அவரது மகன் பாலமுருகன் வெட்டியதில் பலியான அப்பாவு.

“திருச்சியில் போலி ஆவணங்கள் மூலம் அரசு மற்றும் தனியார் நிலங்கள் அபகரிப்பு! – புகார் கொடுத்தவர்களை வெட்டி சாய்த்த ரியல் எஸ்டேட் புரோக்கர்!-அதிகாரிகளின் உடந்தையால் தொடரும் அநியாயங்கள்..!” என்ற தலைப்பில் நமது ‘உள்ளாட்சித்தகவல்’ ஊடகத்தில் நேற்று (06.05.2019) மாலை ஆதாரத்துடன் விரிவாக ஒரு செய்தி வெளியிட்டு இருந்தோம். 

ரியல் எஸ்டேட் புரோக்கர் சந்தானத்தைப் பற்றி புகார் கொடுத்த பொன்னுச்சாமி, அவரது அண்ணன் மகன்கள் அப்பாவு, அப்பாவு தம்பி ஆகியோரை, போலி ஆவணங்கள் மூலம் இடத்தை அபகரித்த சந்தானம் மற்றும் அவரது மகன் பாலமுருகன் ஆகியோர் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் அப்பாவு என்பவருக்கு தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், பொன்னுச்சாமி மற்றும் அப்பாவு தம்பி ஆகியோருக்கு மூக்கில் வெட்டுகாயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும்  திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தனர்.

இந்நிலையில், தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அப்பாவு, இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை குற்றவாளி ரியல் எஸ்டேட் புரோக்கர் சந்தானம்.

ஆனால், கொலை குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

‘கொலை குற்றவாளிகளை கைது செய்யும் வரை அப்பாவு சடலத்தை அடக்கம் செய்யமாட்டோம்!’- என்று அவரது உறவினர்கள் ஆதங்கத்தோடு கூறி வருகின்றனர்.

கொலையாளிகளும், கொலை செய்யப்பட்டவரும் (குலாப்பட்டி) ஒரே ஊர் என்பதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதனால் ஏர்போர்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலாப்பட்டியில் உள்ள ரியல் எஸ்டேட் புரோக்கர் சந்தானம் வீடு இருக்கும் பகுதி உள்பட அப்பகுதி முழுவதும் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

-கே.பி.சுகுமார்.

இது குறித்த முந்தைய விரிவான செய்திகளை பார்வையிட, கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2019/05/06/41950/

Leave a Reply