இரட்டை கொலையாளி சரவணனிடம் ஏற்காடு போலிஸார் தீவிர விசாரணை!  

சேலம் மாவட்டம் ஏற்காடு, தெப்பக்காடு கிராமத்தில் கடந்த 7-ந்தேதி அன்று அந்த கிராமத்தை சேர்ந்த பெரியான் மற்றும் வெள்ளையம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த கொலைகளை செய்ததாக அதே கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் சரவணன், 25. என்பவர் கைது செய்யப்பட்டார்.

கொலையாளி சரவணன் ஏற்கெனவே கடந்த 2012 ஆம் ஆண்டு திருவாரூருக்கு வேலைக்கு சென்ற போது, உடன் வந்த தெப்பக்காடு கிராமத்தை சேர்ந்த வடிவேல் மகன் சரவணன் என்பவனை கொன்றதாகவும், 2011 ஆம் ஆண்டு தெப்பக்காட்டி, அழகேசன் மகன் ஜெயபால் என்பவனை கொலை செய்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் சரவணனை நீதிமன்ற அனுமதி பெற்று காவலில் எடுத்த போலிசார், கொலையாளி சரவணனை ஏற்காடு போலீசார், வருவாய் மற்றும் வன துறையினருடன் ஜெயபாலை கொலை செய்ததாக கூறிய தெப்பக்காடு கிராமத்தை ஒட்டிய வனப்பகுதிக்கு விசாரணைக்காக நேரில் அழைத்துச்சென்றனர். ஆனால், ஜெயபால் கொலை சம்பந்தமாக எந்த தடயமும் கிடைக்காதால், அங்கிருந்து திரும்பினர். இந்நிலையில் கொலையாளி சரவணனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

நே.நவீன் குமார்,

 

Leave a Reply