செருப்புக்காக காத்திருக்கிறேன்!- ‘ஒத்த செருப்பு’ படவிழாவில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு!

நடிகர் பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்துள்ள  “ஒத்த செருப்பு” படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது.

இவ்விழாவில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் கே.பாக்கியராஜ், ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன்,

‘எனக்கு காந்தியின் வரலாற்று புத்தகம் கொடுத்தார்கள். நான் திரும்ப திரும்ப படித்தேன். அதில், காந்தி  ரயிலில் சென்று கொண்டிருந்தபோது அவரது ஒரு செருப்பு தவறி கீழே விழுந்து விட்டது. உடனே அவர் மற்றொரு செருப்பையும் கழற்றி வீசி விட்டார். ஏன் என்று கேட்டதற்கு, ஒரு செருப்பு யாருக்கும் பயன்படாது. அதனால் தான் இன்னொரு செருப்பையும் கழற்றிவிட்டேன்’ என்று கூறியிருக்கிறார்.

“நான் சென்ற இடத்தில் என் மீது ஒரு செருப்பு வீசினர். இன்னொரு செருப்பும் என்னை நோக்கி வரும்”- என்று எதிர்பார்க்கிறேன்.

தற்போது ஒரு செருப்பு கிடைத்துவிட்டது. மற்றொரு செருப்பு விரைவில் கிடைக்கும். அதற்கான தகுதி எனக்கு உண்டு.

இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

-எஸ்.திவ்யா.

Leave a Reply