திறந்த வீட்டில் புகுந்து கை குழந்தையை தூக்கி கொண்டு ஓடிய மனநோயாளி!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், அகரபட்டி அருகே உள்ள லஞ்சமேடு கிராமத்தில் இராசு என்பவர் மனைவியுடன் வசித்து வருகிறார்.

இன்று காலை 9 மணியளவில்  இராசு மனைவி 7 மாத கை குழந்தையை வீட்டில் தூங்க வைத்துவிட்டு, வீட்டின் பின்புறம் வேலை செய்துகொண்டு இருந்துள்ளார்.

அச்சமயம் அந்த வழியாக வந்த மனநோயாளி ஒருவர், திறந்த வீட்டில் புகுந்து 7 மாத கை குழந்தையை தூக்கி கொண்டு ஓட்டம் பிடித்தார். அப்போது குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு அங்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மனநோயாளியை விரட்டி பிடித்து குழந்தையை மீட்டனர். மேலும், அப்பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவரை இந்த மனநோயாளி அரிவாளால் வெட்டினார்.

அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில், சம்பவம் இடத்திற்கு வந்த விராலிமலை போலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-கே.பி.சுகுமார்.
படங்கள்: இராமன்.

Leave a Reply