திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் அருகே அளவுக்கதிகமான பாரம் ஏற்றி வந்த மினிவேன் கவிழ்ந்தது!

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாரம் ஏற்றிவந்த மினிவேன் பழைய பால்பண்ணைக்கும் சஞ்சீவி நகருக்கும் இடையே உள்ள  சங்கீதா ஹோட்டல் அருகே உள்ள குறுகிய பாலத்தில் வாகன ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இன்று மாலை 05.30 மணியளவில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் மினிவேன் ஓட்டுநருக்கு பலத்தக்காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசார் காயமடைந்த ஓட்டுநரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனால் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்துக்குள்ளான வாகனத்தை கிரேன் உதவியுடன் மீட்டு போலீசார் அகற்றினர். அதன் பின்பு போக்குவரத்து சீரானது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

Leave a Reply