பெண் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி!- சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகரில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களுக்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .கா.விசுவநாதன், 15.06.2019 அன்று காலை காவல் ஆணையரகத்தில் துவக்கி வைத்தார்.

இப்பயிற்சி வகுப்பில், காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் அணுகுவது குறித்தும், தங்களது புலனாய்வு திறனை மேம்படுத்துவது குறித்தும் பெண் காவலர்களுக்கு பெண்கள் அமைப்பினர் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும், பேச்சாளர் சுகிசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண் காவலர்களுக்கு பல ஆலோசனைகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு), மகேஷ்குமார் அகர்வால், இணை ஆணையாளர்கள் நஜ்மல் ஹோடா, (போக்குவரத்து/வடக்கு), டி.எஸ்.அன்பு, (மத்திய குற்றப்பிரிவு), எம்.வி.ஜெயகௌரி, (கிழக்கு மண்டலம்), துணை ஆணையாளர்கள் மற்றும் சுமார் 200 பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.

-ஏ.அனுசுயா.

Leave a Reply