மகள்களின் திருமண கடனை கட்ட முடியாததால் விஷமருந்திய தம்பதியினருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை!

நாமக்கல் மாவட்டம், பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிர் பகுதியை சேர்ந்தவர் பாலசண்முகம் வயது 54, டைலர். இவரது மனைவி சுசீலா வயது 47, இருவரும் நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்து, இன்று காலை ஏற்காட்டிற்கு பஸ் மூலம் வந்து படகு இல்லம் பகுதியில் இறங்கியுள்ளனர்.

இருவரும் மலைப்பாதையின் 19-ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதிக்கு நடந்து வந்துள்ளனர். நாமக்கல்லில் இருந்து வரும்போது வாங்கி வந்திருந்த விஷத்தினை குடித்துள்ளனர். பின்னர் இருவரும் வாந்தி எடுத்து மயக்கமடைந்தனர். அவ்வழியாக வந்த மக்கள், இருவரும் மயக்கமடைந்து கிடந்ததை கண்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் இருவருக்கும் ஏற்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விஷமருந்திய தம்பதியினர் தங்கள் இரு பெண்களுக்கும் திருமணம் செய்து வைக்க அதிகளவில் கடன் வாங்கியுள்ளனர்.  கடனை கட்ட முடியாததால் இருவரும் விஷமருந்தியதாக விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.

-நே.நவீன் குமார்.

Leave a Reply