திருச்சி திருவெறும்பூர் அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை!

ரவுடி ரஜினி (எ) கருப்பையா.

திருச்சி திவெறும்பூர் அருகே உள்ள மேல குமரேசபுரத்தை சேர்ந்தவர் முருகைய்யா, இவரது மகன் ரஜினி () கருப்பையா (வயது 32), இவர் மீது திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளது. இதனால் போலீசார் தயாரித்துள்ள ரவுடி பட்டியலில் ரஜினி () கருப்பையா பெயரும் உள்ளது.

இந்நிலையில், இன்று மதியம் எழில் நகரை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திவெறும்பூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் என்பவரின் மகன் ரஞ்சித் (வயது 30) என்பவரும், ரவுடி ரஜினி () கருப்பையா ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்சியில் இருந்து கீழகுமரேசபுரம் பாலம் அருகே வந்தபோது, அங்கு வழிமறித்த மர்ம நபர்கள் சிலர், இருவரையும் ஒட, ஒட விரட்டி வெட்டியுள்ளனர்.

இதில் ரவுடி ரஜினி () கருப்பையா உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் விழுந்த நிலையில், உய்ய கொண்டான் வாய்க்கால் தண்ணீரில் விழுந்து பலியானார்.

உடன் சென்ற ரஞ்சித் வெட்டுபட்ட நிலையில் தப்பி ஒடி, துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் ஞானவேலன் தலைமையிலான போலீசார், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாகு உல் ஹக், திருவெறும்பூர் உதவி காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்ரே ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.

இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

ஆர்.சிராசுதீன்.

 

Leave a Reply