ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில் முழுமையான மருத்துவ பரிசோதனை முகாம் நடைப்பெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில், இன்று 08.07.2019 காலை 9.00 மணிக்கு பொதுமக்களுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இரா.ஆனந்தன், .பெ.வெங்கடேசன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்தார்த், மருத்துவர்கள் புகழேந்தி, முஜாமில் இந்துஜா, சுந்தரசாமி, அரிபாலாஜி, அனிருத்து, சித்த மருத்துவர் உமேரா, சிறப்பு மருத்துவர் ராம் மனோகர் ஆகியோர் தலைமையில், மருத்துவ பணியாளர்கள் பொதுமக்களுக்கு இரத்த பரிசோதனைகள், இரத்தம் அழுத்தம், சர்க்கரை அளவு, .சி.ஜி, புற்று நோய் கண்டறிதல் பரிசோதனை, கற்பபை, மார்பகம், கண் பரிசோதனை, பல் பரிசோதனை போன்ற பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்றது.

இம்முகாமில் 598 ஆண்களும், 379 பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.       

மு.ராமராஜ் .

Leave a Reply