சேலம் மாவட்டம், ஏற்காடு, முருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் பஞ்சநாதன், இவர் இன்று காலை 11:30 மணிக்கு, ஏற்காடு தபால் அலுவலகம் அருகில் உள்ள பேங்க ஆஃப் இந்தியா ஏ.டி.எம்.க்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அங்குள்ள எந்திரத்தில் ஏற்கெனவே 10 ஆயிரம் ரூபாய் சிக்கி கொண்டிருந்துள்ளது. பஞ்சநாதன் அந்த பணத்தை எடுத்து ஏற்காடு காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளர் ரகுவிடம் இன்று ஒப்படைத்தார்.
இது குறித்து உதவி ஆய்வாளர் ரகு கூறியதாவது:
“ஏ.டி.எம்.ல் 10 ஆயிரம் பணம் கிடைத்தது குறித்து, ஏற்காட்டில் உள்ள வங்கிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கும் தகவல் கொடுக்க உள்ளோம். பணம் தொலைத்தவர் உரிய ஆதாரத்துடன் வந்தால் பணத்தை வழங்குவோம்” என்றார்.
-நே.நவீன் குமார்.
Ippadiyum nalla ullangal, im mannil iruppathaal than, mazhai konjam mavathu pozhikirathu,
Panchanatha n endru peyar vaithirukkirar,
Peyaril pancham irunthalum, avar panathai eduthu kollammal police idam oppadaithathu magilchikkaramanathu,
HANDS of to him