ஏற்காடு தூய இருதய பெண்கள் பள்ளியின் 125 ஆவது ஆண்டு விளையாட்டு விழா மருத்துவர் அன்புமணி கலந்துக்கொண்டார்.

சேலம் மாவட்டம், ஏற்காடு டவுன் பகுதியில் உள்ள தூய இருதய பெண்கள் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியின் 125 ஆவது ஆண்டு விளையாட்டு விழா ன்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது

தமிழ்நாடு சுகாதார துறை இயக்குனர் பியூலா ராஜேஷ் தலைமையில் விழா துவங்கியது. சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி, மாவட்ட கல்வி அலுவலர் சுமதி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.   

இவ்விழாவில் மாணவிகளின் தடகள போட்டிகள் மற்றும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றதுபள்ளி மாணவிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கடந்த ஒரு வார காலமாக நடைப்பெற்ற போட்டிகளில் முதலிடம் பிடித்த மார்கிரீட்ஸ் அணிக்கும், இரண்டாமிடம் பிடித்த ஆன்ஸ் அணிக்கும் கேடயம் மற்றும் பரிசுகோப்பை வழங்கப்பட்டது.

நிறைவாக பள்ளி தாளாளர் நான்சி அனைவருக்கும் நன்றி கூறினார்.

 –நே.நவீன் குமார்.

Leave a Reply