அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே!-திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள்  பொன்விழா சந்திப்பு.

திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் இம்மாதம் (ஆகஸ்ட்) 16 மற்றும் 17 ம் தேதிகளில், 1974-ம் ஆண்டின் முன்னாள் மாணவர்கள் பொன்விழா சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் மாணவர்களை கல்லூரியின்  இயக்குனர் மற்றும் முதன்மையாளர்கள் வரவேற்றனர்.

இதில் 1974-ம் ஆண்டு தேர்ச்சிபெற்ற 180 முன்னாள் மாணவர்கள், தங்கள்  குடும்பத்தினருடன் கல்லூரிக்கு வந்து, தங்கள் பழைய நண்பர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் சந்தித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

மேலும்அனைவரும் தங்கள் வகுப்பறைகளை, துறைகளையும், அவர்கள் தங்கிய விடுதிகளையும் கண்டு மகிழ்ந்தனர்.

முன்னாள் மாணவர்களின் அனுபவங்களை தற்போதைய மாணவர்கள் கேட்டறிந்தனர்அனைத்து முன்னாள் மாணவர்களையும் கல்லூரி நிர்வாகமும், கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கமான  ரீகால் (RECAL) கௌரவித்தனர்இன்னிசை மற்றும் அறுசுவை உணவுடன் கொண்டாட்டங்கள் நடைபெற்றன

முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திருச்சி மற்றும் அதைச்  சுற்றியுள்ள பகுதிகளுக்கும், கோவில்களுக்கும் செல்வதாகக் கூறினர். இந்த சந்திப்பை ராஜசேகர்  தலைமை தாங்கி நிர்வகித்தார்.

-ஆர்.சிராசுதீன்.

One Response

  1. MANIMARAN August 24, 2019 7:23 pm

Leave a Reply