திருச்சி, துவாக்குடி அருகே “தினத்தந்தி” நாளிதழ் அச்சகத்தில் பயங்கரத் தீ விபத்து!

திருச்சி துவாக்குடி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ளதினத்தந்திநாளிதழ் அச்சகத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அச்சகத்தின் உள்ளே இருந்த பேப்பர் பண்டல்கள் எரிய ஆரம்பித்தது.

அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, திருவெறும்பூர், துவாக்குடி, நவல்பட்டு பகுதிகளில் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் அச்சகத்தின் உள்ளே இருந்த பேப்பர் பண்டல்கள் எரிந்து நாசமாயின.

தீ விபத்திற்கான முழுமையான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

ஆர்.சிராசுதீன்.

One Response

  1. MANIMARAN September 1, 2019 11:17 pm

Leave a Reply