14 வயது சிறுமியுடன் பாலியல் உறவு வைத்திருந்த வாலிபர் கைது.

மோகன்.

சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை வயிற்றுவலி காரணமாக அவளது பெற்றோர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர், அச்சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதையறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரிடம் மருத்துவமனை செவிலியர்களும், அச்சிறுமியின் தாயாரும் விசாரித்ததில், கரியராமன் மகன் மோகன் என்பவர் தொடர்ந்து பாலியல் உறவு வைத்திருந்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் தாயார் ஏற்காடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலிசார், மோகனை கைது செய்து விசாரித்ததில் மோகன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர்மீது “போக்சோ” சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, நீதிபதி உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர்.

-நே.நவீன் குமார்.

முக்கிய குறிப்பு:

பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்காலம் கருதி,  அவரது பெயர், அவரது பெற்றோர் பெயர் மற்றும் அவரது கிராமத்தின் பெயர், படங்கள் இச்செய்தியில் தவிர்க்கப்பட்டுள்ளது என்பதை, நமது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவித்துகொள்கின்றேன்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்,

Editor & Publisher,

 

 

One Response

  1. MANIMARAN September 3, 2019 11:29 pm

Leave a Reply