மருங்காபுரி  மலை அருகே காட்டுப் பகுதியில் தலையில் கல்லை போட்டு பெண் படுகொலை!

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருங்காபுரி மலை அருகே  காட்டுப் பகுதியில் தலையில் கல்லை போட்டு பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையான  பெண்ணுக்கு சுமார் 35 முதல் 40 வயது இருக்கும். அவர் சிவப்பு ஜாக்கெட், சிவப்பு நிற  சேலை அணிந்துள்ளார். அந்த சேலையில் மஞ்சள், வெள்ளை பூ மற்றும் குதிரை பிரிண்ட் டிசைன் உள்ளது.

இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? இவர் எதற்காக இங்கு வந்தார்? இவரை இப்படி கொடூரமாக கொலை செய்தது யார்? என்ற விபரம் இதுவரை தெரியவில்லை.

இதுகுறித்து புத்தாநத்தம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே,படுகொலை செய்யப்பட்ட இந்த பெண் குறித்த விபரங்கள் யாருக்காவது தெரிந்தால் 04332-273226 / 94981 27719 என்ற எண்ணுக்கு உடனே தகவல் தெரிவிக்கவும்.

– டாக்டர்.துரைபெஞ்சமின்,

Editor & Publisher,

 

One Response

  1. MANIMARAN September 12, 2019 9:32 pm

Leave a Reply