வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியே சென்றவர் வாய்க்காலில் சடலமாக மீட்பு!

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பூலாங்குடி காலனி, பாரத் நகரில், கட்டளை வாய்க்காலில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக இன்று (12.09.2019) காலை அந்த வழியாக சென்ற பெண் ஒருத்தர் நவல்பட்டு போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் அந்த இடத்திற்கு சென்ற நவல்பட்டு போலீசார், வாய்க்காலில் மிதந்த உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

விசாரணையில், அவர் திருச்சி, மாத்தூர் ரவுண்டானா அருகில் மாருதி நகர் 3-.வது தெருவில் வசித்து வந்த பன்னீர்செல்வம் (வயது 53) என்பது தெரியவந்தது. இவருக்கு உமா மகேஷ்வரி என்ற மனைவியும், இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர்இவர் மாத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி உமா மகேஷ்வரி அப்போதே நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் பன்னீர்செல்வத்தை தேடி வந்த நிலையில், இன்று காலை கட்டளை வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டார்உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது கொலையா? தற்கொலையா? இறப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆர்.சிராசுதீன்.

One Response

  1. MANIMARAN September 12, 2019 9:26 pm

Leave a Reply