திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணி ஆய்வுத் துறை சார்பில் “ஆனந்தமான முதுமை” என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி அருகே உள்ள சாந்தி வில்லா, அமைதி நிலையம் எனும் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு பயனுள்ள வகையில் முதுமையை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் “ஆனந்தமான முதுமை” என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை பிஷப் ஹீபர் கல்லூரியின் முதுகலை சமூகப்பணி துறை மாணவர் செ. பிரசாந்த் பிரிட்டோ மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி கபிரியேல் களப்பணி ஆலோசகராக இருந்து வழி நடத்தினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தீர்வு டாக்கிங் தெரபி சென்டர் நிருவனர் சைகோதேரபிஸ்ட் B.அன்னகாமு கலந்துகொண்டு “ஆனந்தமான முதுமை” என்னும் தலைப்பில் முதியோர்களை ஊக்குவிக்கும் விதமாக முதுமையை எவ்வாறு மகிழ்ச்சியாக எதிர்கொள்ள முடியும் என்று சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட முதியோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

– கே.பி.சுகுமார்.

Leave a Reply