திருச்சி செந்தணீர்புரம் அருகே இருச்சக்கர வாகனத்தில் சென்றவர் நிலைத் தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம்!

இருச்சக்கர வாகனத்தின் பதிவு விபரம்.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு 10 மணியளவில், திருச்சி செந்தணீர்புரம் அருகே இருச்சக்கர வாகனத்தில் சென்ற சுமார் 30 வயது மதிக்க தக்க ஒருவர், கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி சாலையில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு வாய் மற்றும் மூக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்ததின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்தனர். ஆனால், காயமடைந்த அந்த நபர் ஆம்புலன்சில் ஏற மறுத்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து  பணியில் இருந்த காவல் துறையினர், காயமடைந்த அந்த நபரை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

-கே.பி.சுகுமார்.

One Response

  1. MANIMARAN September 19, 2019 8:23 pm

Leave a Reply