ஏற்காடு மலைப்பாதையில் மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு.

சேலம் மாவட்டம், ஏற்காடு மற்றும் மலைப்பாதை பகுதியில் இன்று மதியம் 1-00 மணி முதல் 2-30 மணி வரை மிதமான மழை பெய்தது. இந்நிலையில், இன்று மதியம் 3.30 மணியளவில் மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே மரம் ஒன்று முறிந்து சாலையின் நடுவே விழுந்தது.  ஜெ.சி.பி. உதவியுடன் நெடுஞ்சாலைத் துறையினர் மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் மலைப்பாதையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

-நே.நவீன் குமார்.

 

Leave a Reply