திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த 4 லாரிகள் பறிமுதல்! -4 லாரி ஓட்டுநர்கள் கைது.

திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த 4 லாரிகளின் பதிவு விபரம்.

விராலிமலை to மேட்டுப்பாளையம் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த 4 லாரிகளை வையம்பட்டி சுங்க சாவடி (Toll Plaza) அருகே பிடிபட்டது. வையம்பட்டி ஆய்வாளர் தலைமையிலான போலிசார், சுப்ரமணி, இப்ராஹிம்பாஷா, கண்ணப்பன். ரபியுதீன் என்ற 4 லாரி டிரைவர்களையும் கைது செய்து, ஒவ்வொரு லாரியிலிருந்தும் 6 யூனிட் வீதம் 24 யூனிட் மணலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

இதில் என்ன பெரிய கொடுமை என்றால், TN23 AB 6674 என்ற லாரியின் பர்மிட் ரத்து செய்து 3 மாதங்களுக்கு மேலாகியும், அந்த லாரியை பயன்படுத்தி மணல் திருட்டில் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்துள்ளனர். இதையெல்லாம் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

One Response

  1. MANIMARAN September 30, 2019 9:24 am

Leave a Reply