ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து சாய்ந்தது!

கள்ளக்குறிச்சியை சேர்ந்த வாலிபர்கள் 25 பேர், இன்று வேனில் ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்துள்ளனர். வேனை அதேபகுதியை சேர்ந்த நீலகண்டன் (வயது 35) என்பவர் ஓட்டியுள்ளார். இவர்கள் இன்று மாலை சேலம் நோக்கி புறப்பட்டுள்ளனர்.

இவர்கள், ஏற்காடு மலைப்பாதையின் 16 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்றபோது, வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, பக்கவாட்டில் சாய்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த வாலிபர்கள் சுரேஷ், 19, தனுஷ், 19, தானுப்பிரியன், 19, ஆனந்த், 37  விக்னேஷ்வரன், 19  ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் ஏற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

-நே.நவீன் குமார்.

One Response

  1. MANIMARAN September 30, 2019 9:43 am

Leave a Reply