திருவெறும்பூர் அருகே கனமழை காரணமாக அதிகாலை நேரத்தில் இடிந்து விழுந்த வீடுகள்!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைக்கோவில் ராஜவீதியில் கனமழை காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் அடுத்தடுத்து வீடுகள் இடிந்து விழுந்ததில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 6 பேர் அடங்கிய ஒரு குடும்பத்தினர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோவில் ராஜவீதியில் கூத்தைப்பாரை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பழைய காலத்து மாடி வீடு உள்ளது. அந்த மாடி வீடு இன்று அதிகாலை 4 மணியளவில் இடிந்து பக்கத்தில் உள்ள சுப்பிரமணி என்பவரின் ஓட்டு வீட்டின் மீது விழுந்தது. அப்போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சுப்பிரமணி அவரது மனைவி மின்னல் கொடி மற்றும் மகன்கள் புகழேந்தி, பூபாலன், சிவா, ஆனந்தபிரபு ஆகிய 6 பேரும் அலறியடித்துக்கொண்டு வீதிக்கு ஓடி வந்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக 6 பேரும் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார்கள்.

 -ஆர்.சிராசுதீன்.

 

One Response

  1. MANIMARAN October 31, 2019 5:49 pm

Leave a Reply