சாலை ஓரத்தில் நின்ற லாரி மீது மோட்டார் பைக் மோதியதில் வழக்கறிஞர் பலி! -ஒருவர் படுகாயம்.

திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில்  நேற்று (23.11.2019) இரவு 9:30 மணியளவில் துவாக்குடி வள்ளுவா் நகரைச் சோ்ந்த வழக்கறிஞர் ராஜராஜசோழன் வயது 47, என்பவா் அவரது ராயல்என்பீல்டு TN 49 B 1113 என்ற வண்டியில் அவரது மகன் சேரலாதன் என்பவருடன் ஓட்டிவந்து திருவெறும்பூா் பாய்ஸ் ஹாஸ்டல் முன்பு ஓரமாக நின்றுகொண்டிருந்த TN 09  B 8995 என்ற லாாியில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து பின் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் மருத்துவா்கள் ஆய்வு செய்து  இறந்து விட்டதாக கூறியதையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்காக, துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு  வந்தனர்.

இது சம்மந்தமாக திருவெறும்பூா் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-ஆர். சிராசுதீன்.

One Response

  1. MANIMARAN November 27, 2019 4:28 pm

Leave a Reply