இரண்டு கார்கள் மற்றும் 30 இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது!-திருவரம்பூர் போலீசார் அதிரடி நடவடிக்கை.

திருச்சி மாவட்டத்தில் திருவரம்பூர் பி.ஹெச்.இ.எல், துவாக்குடி, மணிகண்டம், லால்குடி ஆகிய காவல் நிலைய பகுதிகளில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டு சம்பந்தமாக, திருச்சி காவல்துறை துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹத் உத்தரவின்பேரில், திருவரம்பூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டேங்ரே மேற்பார்வையில், திருவரம்பூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் டி.ஞானவேலன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, எதிரிகளைத் தேடிவந்த நிலையில் 02-12-2019 தேதி இரவு மரியதாஸ் மகன் அகஸ்டின், மாதா கோவில் தெரு, வீரசிங்கம் பேட்டை, நடுக்காவேரி, தஞ்சாவூர் என்பவரை கைது செய்து விசாரணை செய்தபோது, திருவரம்பூர் பி .ஹெச். இ. எல், துவாக்குடி, லால்குடி, மணிகண்டம், திருச்சி ஜங்ஷன், கரூர்,கும்பகோணம், செங்கிப்பட்டி மற்றும் காங்கேயம் ஆகிய இடங்களில் அவர் திருடி விற்ற இரண்டு கார்கள் மற்றும் 30 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளன.

-ஆர். சிராசுதீன்