ரூ.4,47,500/- பணத்தை சாலையில் தவறவிட்ட நபரின் தவிப்பும்!-பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்க உதவிய நபரும்!

மதுரையை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் 29.11.2019-ம் தேதியன்று தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது தான் வைத்திருந்த ரூ.4,47,500/- யை தவறவிட்டுவிட்டார். இதுகுறித்து தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கீதா தேவியிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து அவர் சென்ற பகுதிகளில் CCTV கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினார்.

இதனையடுத்து 03.12.2019-ம் தேதியன்று மதுரையை சேர்ந்த பூபாலன் என்பவர் சாலையில் அனாதையாக கிடந்த பணப்பையை கண்டெடுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் ஒப்படைத்தார்.

இது குறித்து காவல் நிலையங்களில் வழக்கு ஏதேனும் உள்ளதா? என விசாரித்து பணப்பையின் உரிமையாளரை வரவழைத்து உரிய விசாரணைக்கு பின் பணப்பையை ஒப்படைத்தார்.

மேலும், பணம், விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை நேர்மையான முறையில் உரியவரிடம் ஒப்படைக்க உதவிய பூபாலன் என்பவரை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் வெகுவாக பாராட்டினார்.

–டாக்டர் துரை பெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

 

One Response

  1. MANIMARAN December 5, 2019 12:36 pm

Leave a Reply