லாரி மோதியதில் 12 வயது சிறுவன் பலி!

 

திருச்சி  திருவெறும்பூர் சாந்தி தியேட்டர் அருகில் ,பாரதிபுரம் 7வது தெருவை சேர்ந்த அப்பாஸ் என்பவரது மகன் அனீஸ் வயது 12 என்பவர், ,அவரது நண்பருடன் பள்ளி வாசலில் தொழுதுவிட்டு இரவு 8.30 மணிக்கு  சைக்கிளில் வீட்டிற்கு திருவெறும்பூர் நோக்கி தஞ்சை – திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் பின்னால் வந்த லாரி மோதியதில் தலையில் படுகாயமடைந்தவரை துவாக்குடி  அரசு  மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாகவும், இறந்தவர் உடலை பிரேத பரிசோதனை கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது – லாரி நிற்காமல் திருச்சி நோக்கி சென்றுவிட்டது.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply