ஆடு திருடியவர்களை விரட்டி பிடித்த இளைஞர்கள்!

திருச்சி-கல்லனை சாலை காந்திபுரம் அருகே வசித்து வரும் சுவாமிநாதன் கல்யாணி ஆகியோரின் ஆட்டை இன்று மாலை 4:45 மணியளவில் ஆட்டோவில் வந்த சில மர்ம நபர்கள் ஆட்டை கடத்தி சென்றனர். இதை கண்ட ஆட்டின் உரிமையாளர் கல்யாணி கூச்சலிட்டார். இதை கண்ட காந்திபுரத்தை சேர்ந்த பாஸ்கர், பிரதீப், ராமசந்திரன், சேது  ஆகியோர் இருச்சக்கர வாகனத்தில் ஆட்டோவை விரட்டி சென்றனர். ஆட்டோ சினிமா பானியில் தாறுமாறாக சென்றது. அதில் ஆட்டோ நிலைத்தடுமாறி  கீழே விழுந்தது இதில் மூன்று நபர்கள் தப்பி ஓடினர். காயத்துடன ஒரு நபர் மாட்டி கொண்டார். அந்த நபரை திருவெறும்பூர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

–டாக்டர் துரை பெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

Leave a Reply