வீடு புகுந்து ஒருவர் வெட்டி கொலை!-திருச்சி திருவெறும்பூர் காட்டூரில் நடந்த பயங்கரம்.

 

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜென்சி உரிமையாளரை முன்பகை காரணமாக வீடு புகுந்து வெட்டி கொன்ற 7 பேர் கொண்ட கும்பலை திருவெறும்பூர் போலிசார் தேடிவருகின்றனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் அண்ணா நகர் வி எஸ் காலனியை சேர்ந்தவர் தேவதாஸ் இவரது மகன்  ராஜசேகர்(38) இவர் காட்டூர் பகுதியில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜென்சி நடத்தி வருகிறார்.

மேலும் தனது வீட்டிலேயே சிறிய அளவில் மளிகை கடை வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று அதே பகுதியை சேர்ந்த கோபால் என்ற வாலிபர் தலைமையில் 7 பேர் கொண்ட கும்பல் ராஜசேகரின் கடையை சூறையாடிய தோடு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தேவதாஸை தாக்கிவிட்டு ராஜசேகரை தாக்கியதோடு சரமாரியாக ராஜசேகரை வெட்டியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே ராஜசேகர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.

தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார் ராஜசேகரின் உடலை கைப்பற்றி பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அதேப் பகுதியை சேர்ந்த கோபால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அந்த பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி பைப்பில் குளித்ததாக கூறப்படுகிறது.

அபோது ராஜசேகர் இது குடிநீர் என்றும் குளிப்பதற்கு இல்லை என்று கோபாலிடம் சத்தம் போட்டதாகவும் இதில் இருவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோபால் ராஜசேகர் மீது வஞ்சம் வைத்ததோடு அவரது நண்பருடன் சேர்ந்து ராஜசேகரை தீர்த்து கட்டுவதற்காக திட்டம் தீட்டியுள்ளார். அதன் அடிப்படையில் கோபால் தனது நண்பர்கள் 7 பேருடன் அருவாள், கத்தியுடன் அந்த தெருவில் பொதுமக்களை மிரட்டிய வண்ணம் வந்துள்ளனர்.

அப்படி வந்தவர்கள் ராஜசேகரன் வீட்டிற்குள் இருப்பது தெரிந்து நோட்டமிட்டு அதிரடியாக உள்ளே நுழைந்து வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபால் தலைமையிலான 7 பேர் அடங்கிய கொலை கும்பலை தேடி வருகின்றனர். இதனால் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலையான ராஜசேகருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் ராஜ வர்ஷினி (5) என்ற மகளும் பிரபாகரன் (1) என்ற மகனும் உள்ளனர்.

_ ஆர்.சிராசுதீன்.

 

One Response

  1. MANIMARAN January 7, 2020 12:04 pm

Leave a Reply