கழிவு நீரில் மிதக்கும் சுகாதார வளாகம்!

சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், வெள்ளக்கடை பஞ்சாயத்து, பிலியூர் கிராமத்தில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரே அரசு சுகாதார வளாகம் இது மட்டுமே. இந்த சுகாதார வளாகத்தின் வாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கழிவு நீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. அந்த கழிவு நீரும் கரும் பச்சை நிறமாக மாறி, மிகவும் துர்நாற்றம் வீசுகிறது.

இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் கிராம மக்கள் அவதிகுள்ளாகி வருகின்றனர்.

-நே.நவீன் குமார்.

One Response

  1. MANIMARAN January 28, 2020 10:50 pm

Leave a Reply