திருச்சி என்.ஐ.டி சார்பாக காவலர்களுக்கு 3டி முக கவசங்கள் வழங்கப்பட்டன!

திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ள என்.ஐ.டி கல்லூரி சார்பாக, திருவெறும்பூர் வட்டார காவலர்கள் 200  பேருக்கு 3டி முக கவசங்களை, அதன் இயக்குனர் மினி ஷாஜி தாமஸ், திருவெறும்பூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரிடம் இன்று வழங்கினார்.

திருவெறும்பூர் வட்டாரத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் 320 காவலர்கள் உள்ளதாகவும், முதல் முறையாக திருவெறும்பூர் பகுதி காவலர்கள் பயன்படுத்துவதாகவும், அதில் கிடைக்கும் பலனை வைத்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் 3டி முக கவசம் வழங்குவது குறித்து ஆராயப்படும் என்று, திருவெறும்பூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் அம்பிகா, உதவி ஆய்வாளர் ஜான் கென்னடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply