முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 அபராதம்! – ஏற்காடு ஊராட்சி நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில், முகக்கவசம் அணியாதவர்களிடம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ரூ.50 அபராதம் வசூலித்தனர். இதுவரை முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் காவல் துறையினர் அபராதம் வசூலித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று ஏற்காடு டவுன் ஊராட்சிக்குட்பட்ட பஸ்நிலையம், வங்கி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் நடமாடியவர்களிடம் ஏற்காடு டவுன் ஊராட்சி தலைவர் சிவசக்தி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகர் ஆகியோர் ரூ.50 அபராதமாக வசூலித்தார்கள். பின்னர் அவர்களுக்கு முகக்கவசங்களும் வழங்கினர்.

-நே.நவீன் குமார்.

One Response

  1. MANIMARAN June 5, 2020 10:26 pm

Leave a Reply