கொரோனா தொற்றால் உயிரிழந்த பட்டினம்பாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன் திருவுருவப் படத்துக்கு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) ஜே.கே.திரிபாதி மலர் அஞ்சலி!

சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் (வயது 57). இவர் சென்னை பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், உடல் நிலை சரியில்லாமல் கடந்த மாதம் 11-ம் தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி ஜீலை -1 அதிகாலை உயிரிழந்தார்.

உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பட்டினப்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) ஜே.கே.திரிபாதி உள்பட, காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

-துரைதிரவியம்.

Leave a Reply