லாட்டரி சீட்டு விற்பனை!-காவல்துறையினர் பரிந்துரையின் பேரில் அரவை மில்லுக்கு சீல் வைத்த வருவாய்துறையினர்!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வடக்கு காட்டூர், பாப்பாக்குறிச்சி செல்லும் சாலையில் உள்ள “திருவருள்” என்ற அரவை மில்லில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் ஞானவேலன் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில், “திருவருள்” அரவை மில்லை காண்காணித்த சார்-ஆய்வாளர்கள் ஜெகதீஸ் மற்றும் வேல் அழகன் ஆகியோர், அரவை மில்லில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த வடக்கு காட்டூரை சேர்ந்த ராஜகோபால் (வயது 52) மற்றும் வீதி வடங்கத்தைச் சேர்ந்த ராஜகுரு (வயது 59) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இது சம்மந்தமாக திருவெறும்பூர் வட்டாட்சியருக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்ததின் பேரில். காவல்துறையினரின் பரிந்துரையை ஏற்ற வருவாய்துறையினர், அந்த அரவை மில்லை பூட்டி நேற்று சீல் வைத்தனர்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply