காட்டுமன்னார்கோவில் வெடி விபத்து நடந்த இடத்தை, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் நேரில் பார்வையிட்டார்.

கடலூர் மாவட்டம் ,காட்டுமன்னார்கோவில் ஒன்றியம், குருங்குடி கிராமத்தில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையறிந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் நேரடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், வெடி விபத்து நடந்த இடத்தையும் நேரில் பார்வையிட்டார்.

ஏ.வி அனுசியா.

Leave a Reply