“உள்ளாட்சித்தகவல்” செய்தி எதிரொலி!-வேதாரண்யத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் “வேதா மெஸ்” உரிமையாளர் சண்முகசுந்தரம் கைது.

“வேதா மெஸ்” உரிமையாளர் சண்முகசுந்தரம்.

10-ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த காம வெறிப்பிடித்த கயவர்கள்..!-முக்கிய குற்றவாளியை கைது செய்யாமல் தப்பவிட்ட போலிசார்..!”-என்ற தலைப்பில் நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தில் நேற்று (02.10.2020) விரிவாகவும், ஆதாரப்பூர்வமாகவும் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இவ்வழக்கில் எம்.ஆர்.கோழிப் பண்ணை உரிமையாளர் விஜி என்கின்ற விஜயன், துர்காதேவியின் கணவன் அரவிந்த், வேதா மெஸ் உரிமையாளர் சண்முக சுந்தரம், புரோக்கராக செயல்பட்ட துர்காதேவி ஆகியோர் மீது, வேதாரண்யம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மலர்கொடி போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு (குற்ற எண்: 07/2020) பதிவு செய்து, இதுதொடர்பாக விஜி என்கின்ற விஜயன், அரவிந்த், துர்காதேவி ஆகிய 3 பேரை மட்டும் கைது செய்தனர்.

ஆனால், சிறுமி யோகேஸ்வரியின் இந்த நிலமைக்கு முதல் முக்கிய காரணமாக இருந்த “வேதா மெஸ்” உரிமையாளர் சண்முக சுந்தரம் மட்டும் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று, நமது செய்தியில் பதிவு செய்து இருந்தோம். அதற்கு காரணம் என்ன என்பதையும் அதில் குறிப்பிட்டு இருந்தோம்.

இந்நிலையில், நமது “உள்ளாட்சித்தகவல்” செய்தி எதிரொலியின் விளைவாக “வேதா மெஸ்” உரிமையாளர் சண்முக சுந்தரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

இது சம்மந்தமான முந்தைய செய்திக்கு கீழ் காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2020/10/02/50813/

Leave a Reply