தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் திருவுருப் படத்திற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முதுமையின் காரணமாக அண்மையில் உடல்நலக் குறைவால் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் காலமானார். இதையொட்டி திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திற்கு இன்று (19.10.2020) நேரில் சென்று, தவுசாயம்மாள் திருவுருப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, முதலமைச்சர் கே.பழனிசாமிக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.

அதேபோல் மாலை முரசு நாளிதழின் நிர்வாக இயக்குநர் இரா.கண்ணன், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியின் முகாம் அலுவலகத்திற்கு இன்று (19.10.2020) நேரில் சென்று, தவுசாயம்மாள் திருவுருப் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

–எஸ்.திவ்யா, கே.பி.சுகுமார்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply