ஏற்காடு அருகே 60 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல்!-ஒருவர் கைது.

ம. இளையராஜா.

சேலம் மாவட்டம், ஏற்காடு, புளியங்கடை கிராமத்தை சேர்ந்த மலையன் மகன் இளையராஜா (வயது 31), கூலித்தொழிலாளி. இவர் சந்தன மரங்கள் கடத்தி விற்க உள்ளதாக தகவல் அறிந்த எஸ்.பி. தனிப்படை மற்றும் ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான காவல் துறையினர், இன்று (10.11.2020) காலை இளையராஜா வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

வீட்டில் விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 60 கிலோ சந்தனக் கட்டைகளை கைப்பற்றியதோடு, இளையராஜாவையும் கைது செய்தனர். பின்னர் சந்தனக் கட்டைகளை வனத்துறை அதிகாரி (ரேஞ்சர்) சுப்பிரமணியனிடம், போலீசார் ஒப்படைத்தனர். இது குறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சந்தனக் கட்டைகளை கேரளாவில் வாங்கி, பஸ்சில் ஏற்காடு கொண்டு வந்து, அதனை ஏற்காட்டில் பதுக்கி வைத்து விற்க முயற்சித்தபோது காவல் துறையினரிடம் இளையராஜா சிக்கிக்கொண்டார்.

-நே.நவீன் குமார்.

Leave a Reply