வேல் யாத்திரையில் பங்கேற்க சென்ற போது விபத்து!-நடிகை குஷ்பு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பாஜக சார்பில் கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்கப்பதற்காக, நடிகை குஷ்பு காரில் புறப்பட்டு சென்றுக்கொண்டிருந்தபோது, மதுராந்தகம் அருகே இன்று (18.11.2020) காலை 9.30 மணியளவில் அவர் பயணம் செய்த கார் மீது, கண்டெய்னர் லாரி ஒன்று மோதியதில், நடிகை குஷ்பு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதில் நடிகை குஷ்பு பயணம் செய்த கார் பலத்தச் சேதமடைந்தது.

இந்த விபத்துக் குறித்து மதுராந்தகம் காவல் நிலைய ஆய்வாளரை தொடர்புக் கொண்டு விபரம் கேட்டோம். இதுசம்மந்தமாக வழக்கு (குற்ற எண்:1901/2020) பதிவு செய்து, விபத்துக்கு காரணமான கண்டெய்னர் லாரி ஓட்டுநர் உத்தமபாளையத்தைச் சேர்ந்த அப்துல்ஹக்கீம் (வயது 54), த /பெ. காதர்மீரான் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

உங்கள் ஆசீர்வாதங்களுடனும், கடவுளின் கிருபையுடனும், நான் பாதுகாப்பாக இருக்கிறேன். வேல் யாத்திரையில் பங்கேற்க கடலூர் நோக்கி எனது பயணத்தைத் தொடருவேன். கடவுள் முருகன் எங்களை காப்பாற்றியுள்ளார். என் கணவர் கடவுள் முருகன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இதன் மூலம் உணரமுடிகிறது.

தயவுசெய்து பத்திரிகையாளர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்; எனது கார் சரியான பாதையில் சென்று கொண்டிருந்தது, இந்த கண்டெய்னர் லாரி எங்கிருந்தோ வந்து என்னிடம் மோதியது.

இவ்வாறு நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply