பொய்யை கூட ஒழுங்காக சொல்ல ஸ்டாலினுக்கு தெரியவில்லை!-திருச்சி பிரசார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி விமர்சனம்.

தேர்தலுக்காக வெளிமாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் கூறுவதை கேட்டு திமுக செயல்படுகிறது. நாட்டில் நடப்பது ஸ்டாலினுக்கு தெரியவில்லை. ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக தான். கருணாநிதியின் மகன் என்ற ஒரே காரணத்தினால் ஸ்டாலின் திமுக தலைவராக ஆக்கப்பட்டார். நான் கடுமையாக உழைத்து படிப்படியாக முதல்வர் பதவி அடைந்தேன். பொய்யை கூட ஒழுங்காக சொல்ல ஸ்டாலினுக்கு தெரியவில்லை. பொய்யை சொன்னாலும் பொருத்தமாக சொல்ல வேண்டும் என்ற வார்த்தை ஸ்டாலினுக்கு தான் பொருந்தும்,

இவ்வாறு திருச்சி மாவட்டம் ,தொட்டியத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி பேசினார்.

திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தொட்டியத்தில் வாழைத்தோட்டங்களைப் பார்வையிட்டு, வாழைத்தோட்டத் தொழிலாளர்களின் குறைகளைக் தமிழக முதலமைச்சர் கேட்டறிந்தார்.

திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற தொகுதி, கொத்தம்பட்டி இந்திரா காலனி பகுதியில் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

எஸ்.திவ்யா.

Leave a Reply