மழையின் காரணமாக திருச்சி, மணிகண்டம் ஒன்றியம், அளுந்தூர், தென்றல் நகரில் வீடு சேதமடைந்தது.

கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையின் காரணமாக திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, மணிகண்டம் ஒன்றியம், அளுந்தூர் ஊராட்சியில் உள்ள தென்றல் நகர் கிராமத்தில் வசித்து வந்த மல்லிகா பன்னீர்செல்வம் என்பவருடைய வீடானது நேற்று இரவு இடிந்து விழுந்தது. இதனை மணிகண்டம் ஒன்றிய பெருந்தலைவர் கருப்பையா மற்றும் அளுந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் எமல்டா லில்லி கிரேசி ஆரோக்கியசாமி முன்னிலையில் தாசில்தார் மற்றும் VAO இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

-எம்.பிரபாகரன்.

Leave a Reply