இலங்கை கடற்படைத் தாக்குதலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு, மக்களவை உறுப்பினர் கனிமொழி நேரில் ஆறுதல்.

கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மீது, இலங்கை கடற்படைத் தாக்குதல் நடத்தியதில், தங்கச்சி மடத்தைச் சார்ந்த மெசியா, நாகராஜ், செந்தில்குமார், சாம்சன் டார்வின் ஆகிய 4 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இன்று தங்கச்சி மடத்திற்கு சென்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி, உயிரிழந்த மீனவர்களின் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

-சி.கார்த்திகேயன்.

Leave a Reply