மதுரையில் முகாமிட்டுள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நேற்று இரவு மதுரை விமானம நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின் பசும்பொன் முத்துராமலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் ஜெ.பி.நட்டா உரையாற்ற உள்ளார்.

-சி.கார்த்திகேயன், எஸ்.திவ்யா.

Leave a Reply