‘அழுக்கைப் போக்க சோப்பு; ஆனால், அந்த சோப்பு டப்பா அழுக்கு’

RAJESH DAS,  IPS

RAJESH DAS,  IPS

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது, பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் எழுத்துப்பூர்வமாக பாலியல் புகார் அளித்ததையடுத்து, அந்த பாலியல் குற்றச்சாட்டு சம்மந்தமாக அவர் மீது உரிய விசாரணை நடத்த, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து, தமிழக அரசு இன்று ஆணைப் பிறப்பித்துள்ளது.

இந்த விசாரணைக் குழுவில் சீமா அகர்வால், ஐ.ஜி அருண், டிஐஜி சாமூண்டிஸ்வரி, வி.கே. ரமேஷ் பாபு, லொரைட்டா ஜோனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதைப் பார்க்கும்போது ‘அழுக்கைப் போக்க சோப்பு; ஆனால், அந்த சோப்பு டப்பா அழுக்கு’ -என்ற கவிதை வரிகள்தான் எமது நினைவுக்கு வருகிறது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply