அர்ஜுன மூர்த்தி தலைமையில் புதிய அரசியல் கட்சி உதயம்!-பிப்ரவரி 27-ந்தேதி அறிவிப்பு வெளியாகும்.

அர்ஜுன மூர்த்தி.

அரசியலுக்கு வருவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், தன் உடல்நலப் பிரச்னை காரணமாக அரசியலில் ஈடுபட முடியாது எனப் பின்வாங்கிவிட்டார்.

அவர் தொடங்கப்போவதாக அறிவித்திருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியும், மேற்பார்வையாளராகத் தமிழருவி மணியனும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கவிருப்பதாக அர்ஜுன மூர்த்தி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி பிப்ரவரி 27-ந்தேதி புதிய அரசியல் கட்சியின் பெயரை அர்ஜுன மூர்த்தி அறிவிக்க இருக்கிறார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN February 26, 2021 10:52 pm

Leave a Reply