சுடுகாட்டுக்கு நிலம் ஒதுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்!-ஏற்காடு அருகே கறுப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்.

சேலம் மாவட்டம், ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செம்மநத்தம் ஊராட்சிக்குட்பட்ட செங்கலுத்துப்பாடி கிராமம். இக்கிராமத்திற்கு சுடுகாட்டுக்கு என்று தனி இடம் கிடையாது.

இந்நிலையில், தங்கள் கிராமத்தில் 200-க்கும் அதிகமான குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருவதாகவும், தங்கள் கிராமத்தில் சுடுகாட்டு வசதி இல்லாததால் உயிரிழப்புகள் நேரிடும் போது அவர்களை புதைப்பதற்கு பெரும் சிரமப்படுவதாகவும், எனவே, தங்கள் கிராமத்தை ஒட்டியுள்ள சர்வே எண்கள் 14/2A மற்றும் 15 ஆகிய தரிசு நிலங்களில் தங்களுக்கு சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என, பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளதாகவும், தற்போது எங்களுக்கு சுடுகாட்டிற்கு தனி இடம் ஒதுக்கவில்லை எனில், வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்து, தங்கள் வீடுகளிலும் மற்றும் தெருக்களிலும் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

-நே.நவீன் குமார்.

Leave a Reply