திருச்சி மேலபுதூர் சுரங்கப்பாதையில் நீர் கசிவு!-வழுக்கி விழும் வாகன ஓட்டிகள்..!

திருச்சி மேலப்புதூர் சுரங்கப்பாதையில் கடந்த சில மாதங்களாக நீர் கசிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று (10-03-2021) மாலை பெய்த கனமழையால் பாலத்தின் நடுவே பாசனம் பிடித்த பகுதி வழுக்கி விட்டதில் அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த இரு பெண்கள் உட்பட ஆறுக்கும் மேற்பட்டவர்கள் இன்று வழுக்கி விழுந்து காயமடைந்தனர்.

இப்படி மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாகவும், வாகன ஓட்டிகளுக்கு சவாலாகவும் இருக்கும் நீர் கசிவை போர்கால அடிப்படையில் தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட திருச்சி மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

செய்வார்களா? பொருத்திருந்து பார்ப்போம்.

பேராசிரியர்.அ. உமர் பாரூக்.

Leave a Reply